Sorry, you need to enable JavaScript to visit this website.

திருநீலகண்டன் கோயில் - பனஞ்சாடி

வரலாற்றுச் செய்திகள்

இக்கோயில் மொட்டையாண்டவர் கோயில் என்றும் தீருநீலகண்டர் கோயில் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கோயிலின் மேற்கு, தெற்கு பகுதிகள் சுவர்பகுதி வரை மண்ணுள் மறைந்துள்ளன.

ஆடிப்பகுதி முதல் கூரைப் பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான சிகரம் அமைந்துள்ளது.

கபோதகத்திற்கு மேலும் கீழும் முறையே அமைந்துள்ள யாணை வரியும் அண்ண வரியும் குறிப்பிடத்தக்க கலைநயமுடையவை. வுயீமானத்தின் கிரிவப் பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், தட்சிணாரூர்த்தி போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன.

 

அவை தற்பொழுது கோயிலுக்கு முன்பு உள்ள தரைப்பகுதியில் பரவலாகக் கிடக்கின்றன. கோயிலுக்கு முன்பு உள்ள பகுதியில் பல கல் நந்திகள் உள்ளன.

அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

வட்டம் : அம்பாசமுத்திரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 27/த.வ.ப.துறை/நாள்/31.01.91