மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற விதி 110-ன் கீழ், பாரத்நெட் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும், மற்றும் அதற்காக "தமிழ்நாடு ஃபைபர்நெட்" (TANFINET) என்ற பெயரில், சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்படி நிறுவனம் துவங்குவதற்கும், பாரத்நெட் திட்டத்தினை செயல்படுத்தவும் ரூ.50 இலட்சம் பங்கு முதலீட்டாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கண்ணாடி இழை வலைபின்னல் மூலம் 1 Gbps அளவிலான மேம்படக்கூடிய அலைவரிசை வழங்கப்படும்.