மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளையும் அதிவேக அலைக்கற்றையில் கண்ணாடி இழை வலையமைப்பைக் கொண்டு இணைத்திட தமிழ்நெட் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அதன்மூலம் நகர்புற மக்கள் டிஜிட்டல் புரட்சியின் நன்மைகளையும் அரசின் சேவைகளையும் அவரவர் இல்லத்திலிருந்தே பெறமுடியும் எனவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், 14-07-2017 அன்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக, TANTRANSCO கார்ப்பரேஷனின் ஏற்கனவே உள்ள மற்றும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வலையமைப்பை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம், பாரத்நெட் திட்டத்துடன் இணைத்து மாநிலத்தின் “ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு” நிறுவப்படும்.