“ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு” என்பது, “பாரத்நெட்” மற்றும் “தமிழ்நெட்” ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் விரிவான வலையமைப்பாகும். இக்கட்டமைப்பானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் அனைவருக்கும், அவர்களின் இல்லங்களிலேயே அதிவேக மற்றும் மேம்பட்ட அலைக்கற்றையில் டிஜிட்டல் சேவைகளை வழங்கக்கூடிய திறன் கொண்டதாகும்.